சுனில் சேத்ரி: இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி, தான் சமீபத்தில் அறிவித்தது போல கால்பந்து உலகக்கோப்பை தகுதி சுற்றில் குவைத் அணியுடனான போட்டிக்கு பிறகு சர்வேதச கால்பந்து போட்டிகளிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தகுதி சுற்றில் இந்திய அணி, குவைத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த சார்வதேச போட்டியில் இறுதியாக சுனில் சேத்ரி களம் கண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் போட்டி 0-0 என சமனில் முடிவடைந்தது.
மேலும், போட்டி முடிவடைந்த பிறகு அவருடன் விளையாடும் சக இந்திய வீரர்கள் அனைவரும் அவருக்கு மரியாதையுடன் கை கொடுத்தும், கை தட்டியும், கட்டி அனைத்தும் மரியாதை செய்தனர். கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதை நினைத்த சுனில் சேத்ரியும் கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க விடைபெற்றார்.
இவரது, இந்த குவைத் உடனான கடைசி சர்வேதச போட்டியானது கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் திடலில் நடைபெற்றது. இந்த போட்டியை காண உலகெங்கிலும் உள்ள சுமார் 50,000க்கும் அதிகமான அவரது ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர் கண்ணீர் மல்க மைதானத்திலிருந்து வெளியேறும் வீடியோவை X தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.
மேலும், இந்திய கால்பந்து அணி நிர்வாகமும் அவரது புகைப்படத்தை அவர்களது X தளத்தில் பகிர்ந்து நன்றி கூறி உள்ளனர். பார்ப்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…