ஹர்திக் பாண்டியாவிற்கு வெற்றிகரமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை..!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டிய  முதுகு பகுதியில் காயம் காரணமாக ஐந்து மாதங்கள் விளையாட நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் முதுகு பகுதியில்  ஹர்திக் பாண்டியவிற்கு காயம் ஏற்பட்டது.
அதனால் அவர் தற்காலிகமாக சிகிச்சை பெற்று அணியில்  விளையாடினர்.பின்னர்  முதுகு பகுதி வலி  அதிகரித்ததால் அவர் தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் விலகினார்.  ஹர்திக் பாண்டிய ஏற்கனவே லண்டன் சென்று சிகிச்சை பெற்ற டாக்டரிடம் சென்ற ஆலோசனை பெற்றார்.


அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஐந்து மாதங்கள் விளையாட முடியாது எனக் கூறினார். இதை தொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளார்.இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணி உடனான தொடரில் விளையாடிய  பிறகு  வங்காளதேச தொடரில் இந்திய அணி விளையாட உள்ளனர்.அதிலும் ஹர்திக் பாண்டிய விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்