நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியின் அம்பயராக பாகிஸ்தானின் அலீம் தார் இருந்து வருகிறார். நேற்றைய போட்டியில் அலீம் தார் அம்பயராக பணியாற்றியதன் மூலம் ஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடித்தார்.
ஸ்டீவ் பக்னர் 1989 முதல் 2009 வரை 128 டெஸ்ட் மற்றும் 181 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக பணியாற்றினார்.பாகிஸ்தான் அணியில் முதல் தர கிரிக்கெட் விளையாடிய அலீம் தார் 2001-ம் ஆண்டு முதல் அம்பயராக பணியாற்றி வருகிறார்.இதுவரை அலீம் தார் 129 டெஸ்ட் போட்டியில் அம்பயராக இருந்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் , எனது சர்வதேச வாழ்க்கையில் இரண்டு அதிசயங்களை பார்த்து உள்ளேன் என கூறினார். அதில் ஒன்று பிரையன் லாராவின் டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்கள்.அடுத்த அதிசயம் தென்னாப்பிரிக்கா அணி ,ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2006-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் 434 ரன்கள் எடுத்தது. போன்ற சில மறக்கமுடியாத போட்டிகளையும் , சாதனைகளையும் பார்க்கும் நல்ல அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன் என கூறினார்.
மேலும் தென்னாப்பிரிக்காவின் ரூடி கோர்ட்சென் 209 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக பணியாற்றி உள்ளார். அலீம் தார் 207 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார். எனவே ரூடி கோர்ட்சென் சாதனையை முறியடிக்க அலீம் தாருக்கு இரண்டு போட்டிகள்தான் உள்ளன. அலீம் தார் 46 டி 20 சர்வதேச போட்டிகளிலும் அம்பயராக பணியாற்றியுள்ளார்.
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…