டி20 உலகக்கோப்பையை ரோஹித் சர்மா வாங்கிக்கொடுப்பார் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!

Published by
பால முருகன்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் அடுத்த வாரம் 11-ஆம் தேதி தொடங்குகிறது.  இந்த தொடருக்கான போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என நேற்று பிசிசிஐ அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், ரோஹித் ஷர்மா கண்டிப்பாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்றும் கடந்த ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததை இந்த முறை டி-20 போட்டிகளில் விளையாடி கோப்பையை வென்று கொடுப்பார்  என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ள டி20 போட்டிகளில் இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா என்று அறிவிப்பு வெளியானவுடன் கண்டிப்பாக அவர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 போட்டியில் விளையாடுவார் என்று தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஷாகிப் அல் ஹசன்..!

கடைசியாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் அவர் ரொம்பவே வேதனை அடைந்தார். எனவே, கண்டிப்பாக வரும் வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை விளையாடி அதனை வெண்றுவிட்டு வெளியேற விரும்புவார்.

எனவே, கண்டிப்பாக இந்த முறை நன்றாக விளையாடி இந்திய அணியை கோப்பையை வெல்ல வைக்கவேண்டும் என்று ரோஹித் விளையாடுவார். இருந்தாலும் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட்  என்பது மிகவும் பெரிய போட்டிகளில் ஒன்று. அதற்கு அடுத்தபடியாக டி20 போட்டிகள் உள்ளது. எனவே, கடந்த ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட டி20 உலகக்கோப்பை போட்டியில் வென்றாலும் ரோஹித் சர்மாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் ” எனவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

33 minutes ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

1 hour ago

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…

2 hours ago

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

9 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

13 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

13 hours ago