இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருடாவருடம் விருது வழங்கும் விழா ஜனவரி 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இந்த வருடம் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதிற்கு இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தமிழகத்தை சேர்ந்தவர்.இவர் 43 போட்டிகளில் 2 சதம் உள்பட 2062 ரன்களும் , 146 ஒரு நாள் போட்டிகளில் 4 சதம் உள்பட 4,091 ரன்களும் அடித்து உள்ளார்.
1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது ஸ்ரீகாந்த் அந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார். டெல்லியைச் சேர்ந்தவர் அஞ்சும் சோப்ரா.இவர் 12 போட்டிகளில் 548 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் ,18 அரைசதம் உள்பட 2,856 ரன்களும் எடுத்துள்ளார். மேலும் 2005-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…