ஹெராயின் வைத்திருந்த வழக்கு.. இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் கைது!

Default Image

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க, ஹெராயின் வைத்திருந்தாக கைது செய்யப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க. 25 வயதாகும் இவர், 2018 ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியில் இணைந்தார். மேலும், தனது அறிமுக போட்டியிலே அவர் ஹட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில், ஷெஹான் மதுசங்கா லாக்டவுன் நேரத்தில் கார் ஓட்டிவந்தார். அவரை பலானா என்ற இடத்தில் இலங்கை காவல்துறையினர் அவரை மடக்கினர். அப்பொழுது அவரை சோதனை செய்ததில், அவரிடம் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். மேலும், அவரை இரண்டு வாரம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்