இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயா நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியின் போது சட்டவிரோத வீசியதாக நடுவர்கள் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கல்வி நிறுவனத்தில் அவர் பந்துவீச்சை நிரூபிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
அதன்படி டாக்டர் ஆதித்யா மற்றும் ஞானவேல் ஆகியோர் மேற்பார்வையில் அவரின் பந்துவீச்சு இயந்திரம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பந்து வீச்சு முறை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியிலிருந்து வெளியேறியுள்ளது.
4 முதல் 17 டிகிரி வரை அவரது பந்து வீச்சு சென்றதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதனால் 2020 ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி வரை அவருக்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு இரண்டாவது முறையாக பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் முறை 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பந்து வீச தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…