சென்னை : இன்றைய நாளில் முக்கிய விளையாட்டு செய்திகளில், நீரஜ் சோப்ரா – மனு பாக்கர் திருமணம் சர்ச்சை முதல் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ செய்யும் பயிற்சி வரை உள்ள நிகழ்வுகளை பார்க்கலாம்.
நடைபெற்று வந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வென்றவர்கள் தான் நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும். இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மனு பாக்கரின் தந்தை, நீரஜ் சோப்ராவுக்கும், மனு பாக்கருக்கும் திருமணம் என வெளியான தகவல் அனைத்தும் வெறும் வதந்தியே என விளக்கம் அளித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், ஊக்க மருந்து சோதனை தொடர்பான விதிமுறைகளை மீறியதன் காரணமாக பாரிஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 3 முறை விதிமுறைகளை மீறியதைத் தொடர்ந்து ஒன்றறை வருடங்கள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அர்ஷத் நதீமை, பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டிகளின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஜேசன் கில்லெஸ்பி, கவுரவிக்கும் விதமாக பாகிஸ்தான் ட்ரெஸ்ஸிங் அறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 92.97 மீட்டருக்கு ஈட்டி எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார் பாகிஸ்தான் வீரரான அர்சத் நதீம். இவரை கவுரவிக்கும் விதமாக பஞ்சாப் மாகாண முதலமைச்சரான மர்யம் நவாஸ் 92.97 என்ற நம்பர் பிளேட் கொண்ட ஹோண்டா சிவிக் காரை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், அவரை நேரில் சந்தித்து சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான காசோலையும் வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டி, அக்டோபர் 6ஆம் தேதி, தர்மசாலாவில்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு ஓய்வு அறையில் பராமரிப்பு வேலை நடைபெறுவதால், மத்தியபிரதேசத்தில் உள்ள குவாலியர் மைதானத்தில், முதல் டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் அதாவது வரும் நவம்பர் மாதத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெரும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டில் நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித், தனது பெயரை மீண்டும் கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சவூதியில் நடைபெறும் சவூதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் நட்சத்திர அணியான அல் நாசர் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். நேற்று அவரது எக்ஸ் தளத்தில் அந்த அணிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…