கடந்த 11-ம் தேதி இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் கே.எல் ராகுல் 91 , துணை கேப்டன் ரோகித் சர்மா 71 , கேப்டன் விராட் கோலி 70 ரன்கள் குவித்தனர்.இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அணி 241 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்காக வைக்கப்பட்டது.
ஆனால் பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போட்டி முடிந்த பின் பேசிய விராட் கோலி , முதலில் பேட்டிங் செய்தால் எப்படி வெற்றி பெறுவது குறித்து பல பேசி இருந்தோம்.ஆனால் களத்தில் திட்டங்களை செயல்படுத்துவது தான் முக்கியம். என் பேட்டிங்கில் வித்தியாசமான அணுகுமுறையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த போட்டி அமைந்தது.
நான் கே.எல் ராகுலிடம் நீ கடைசிவரை நின்று விளையாடு நான் மறு பக்கம் அதிரடி ஷாட்டுகளை வெளிப்படுத்துகிறேன் என கூறி அதன்படியே விளையாடினேன். என்னால் மூன்று வடிவிலான போட்டியிலும் ரன் குவிக்க முடியும். எல்லாமே மனம் கவனம் செலுத்துவதில் தான் இருக்கிறது.
விராட் கோலி மேலும் கூறுகையில், இன்னொரு வகையில் இந்த இன்னிங்ஸ் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. எனக்கு திருமணமாகி இன்றுடன் (புதன்கிழமை உடன் ) இரண்டு ஆண்டு ஆகிறது. இந்த தொடரை வென்றது எனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு நான் வழங்கும் திருமண நாள் சிறப்பு பரிசு. அந்த வகையில் இது மறக்க முடியாத இரவாகும்’ என கூறினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…