ஃபிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி ..! 2-1 என முன்னிலை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் ..!

Published by
அகில் R

யூரோ கோப்பை : இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி அபாரம்.

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் தொடங்கப்பட்டது.  கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கொண்ட இந்த தொடர் தற்போது அரை இறுதி போட்டி வரை எட்டியுள்ளது. இதனால், இன்று நடைபெற்ற இந்த தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியும், ஸ்பெயின் அணியும் மோதியது.

எப்போதும் போல விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியில் ஃபிரான்ஸ் அணி முதலில் தீவிர ஆதிக்கத்தை செலுத்தியது. அதிலும் முதல் 5’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பையும் தவறவிட்டது. அதனை தொடர்ந்து 4′ நிமிடங்களுக்கு பிறகு ஃபிரான்ஸ் அணி வீரரான கோலோ முவானி சரியாக 9′ தாவது நிமிடத்தில் ஒரு அபாரமான கோலை அடித்து கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ஃபிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது, ஆனாலும் ஸ்பெயின் அணி விடாமல் முயற்சி செய்து சரியாக 21’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் வீரரான யமல் ஸ்பெயின் அணிக்கான முதல் கோலை பதிவு செய்ததுடன், சமன் செய்யும் கோலையும் பதிவு செய்தார். இதனால் 1-1 என ஸ்பெயின் அணி சமன் செய்தனர்.

இந்த கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வயது குறைந்த இளம் வீரராக முதல் ஆளாக மாறினார் ஸ்பெயின் அணியின் லாமின் யமல்.  இந்த கோல் மூலம் போட்டியானது மேலும் விறுவிறுப்பாக சென்றது, அதனை தொடர்ந்து 25’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மற்றொரு வீரரான ஓல்மோ 2-வது கோலை அடித்து ஸ்பெயின் அணியை முன்னிலை பெற செய்தார்.

இதன் மூலம் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை வகித்தது, நடைபெற்ற இந்த போட்டியில் முதல் அரை மணி நேரத்திலேயே போட்டி முடிந்தது என கூறலாம். மேற்கொண்டு நடந்த இந்த போட்டியில் ஃபிரான்ஸ் அணி கடுமையாக முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என ஸ்பெயின் அணி ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி யூரோ கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

மேலும், நாளை அதிகாலை நெதர்லாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் அரை இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணி ஸ்பெயின் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

3 minutes ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

57 minutes ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

57 minutes ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

1 hour ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

2 hours ago

ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு போகாதீங்க! அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago