இந்தியா , தென்னாபிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்கள் எடுத்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதில் அதிகபட்சமாக விராட்கோலி 254 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். மயங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் எடுத்த போது 8 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வந்தது.
அப்போது ஒன்பதாவது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடிய மகாராஜா 72 ரன்கள் குவித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும் , உமேஷ் யாதவ் 3 விக்கெட் எடுத்தனர். இதனால் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இது தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் ஐடன் மார்க்ராம் வெளியேறினார். பின்னர் இறங்கிய டி ப்ரூயின் 8 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் டீன் எல்கர் நிதானமாக விளையாடி அரைசதம் அடிக்காமல் 48 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் , குவின்டன் டி காக் இருவரும் 5 ரன்களில் வெளியேறினார். தற்போது தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…