உள்ளூர் போட்டியான ராஞ்சி கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியாவில் உள்ள முக்கியமான மாநில அணிகள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடா மற்றும் ஆந்திரா அணிகளுக்கிடையில் முதல் போட்டி தொடங்கியது.
இப்போட்டி விஜயவாடாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. விஜயவாடா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து விஜயவாடா அணி வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்து நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மைதானத்திற்குள் யாரும் எதிர்பாராத நேரத்தில் பாம்பு ஒன்று அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது. இதனால் பொதி ஆரம்பிக்க சிறிது காலதாமதமானது. இதை தொடர்ந்து பாம்பை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்திய பிறகு போட்டி தொடங்கியது.
மைதானத்தில் பாம்பு சுற்றி கொண்டு இருந்ததை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. மேலும் நேற்று முதலில் இறங்கிய ஆந்திரா அணி 74 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஹனுமா விஹாரி 83 ரன்கள் குவித்தார். ஆதித்யா சர்வதே 4 விக்கெட்டையும் , ரஜ்னீஷ் குர்பானி 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய விஜயவாடா அணி விளையாடியது. நேற்றைய ஆட்ட முடிவில் விஜயவாடா அணி விக்கெட்டை இழக்காமல் 26 ரன்கள் எடுத்தது.
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…
சென்னை : பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்படும் காமெடியானாக இருந்வர். தனது நடிப்பால் அல்ல,…
சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…