மைதானத்தில் புகுந்த பாம்பு..! அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரர்கள்! வீடியோ உள்ளே!

Default Image
  • விஜயவாடா அணி வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்து நின்று கொண்டிருந்தனர்.
  • அப்போது மைதானத்திற்குள் யாரும் எதிர்பாராத நேரத்தில்  பாம்பு ஒன்று அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது.

உள்ளூர் போட்டியான ராஞ்சி கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியாவில் உள்ள முக்கியமான மாநில அணிகள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடா மற்றும் ஆந்திரா அணிகளுக்கிடையில்  முதல் போட்டி தொடங்கியது.

இப்போட்டி விஜயவாடாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. விஜயவாடா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து விஜயவாடா அணி வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்து நின்று கொண்டிருந்தனர்.

அப்போது மைதானத்திற்குள் யாரும் எதிர்பாராத நேரத்தில்  பாம்பு ஒன்று அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது. இதனால் பொதி ஆரம்பிக்க  சிறிது காலதாமதமானது. இதை தொடர்ந்து பாம்பை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்திய பிறகு போட்டி தொடங்கியது.

மைதானத்தில் பாம்பு சுற்றி கொண்டு இருந்ததை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. மேலும் நேற்று முதலில் இறங்கிய ஆந்திரா அணி 74 ஓவர் முடிவில்   அனைத்து விக்கெட்டையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஹனுமா விஹாரி 83 ரன்கள் குவித்தார். ஆதித்யா சர்வதே 4 விக்கெட்டையும் , ரஜ்னீஷ் குர்பானி 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய விஜயவாடா அணி விளையாடியது. நேற்றைய ஆட்ட முடிவில் விஜயவாடா அணி விக்கெட்டை இழக்காமல் 26 ரன்கள் எடுத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்