தோனி கிட்ட இருந்து அதை கத்துக்கிட்டேன்! ஷிவம் துபே ஓபன் டாக்!

Published by
பால முருகன்

நேற்று (ஜனவரி 11) மொஹாலியில் ஆப்கானிஸ்தானு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே  40 பந்துகளில் 60* ரன்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகன் ஆனார்.

இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்று  17.3 ஓவர்களில் சிவம் துபே இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு பேசிய ஷிவம் துபே  ” ஒரு பினிஷராக எப்படி விளையாடவேண்டும் என்பதை தோனியை பார்த்து கற்றுக்கொண்டேன் என ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” இந்த மாதிரி ஒரு முக்கியமான போட்டியில் இப்படி விளையாட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கான வாய்ப்பு வரும் போது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். நான் பேட்டிங் செய்ய வந்தபோது, ​​போட்டியை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று விரும்பினேன்.

சாதாரணமான விஷயம் தான்! ரன் அவுட் குறித்து பேசிய ரோஹித் சர்மா!

எப்படி முடிக்கவேண்டும் என்பதனை ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய போது எம் .எஸ்.தோனியிடம் இதனை கற்றுக்கொண்டேன். ஐபிஎல் போட்டிகளில் நான் சென்னை அணியில் விளையாடும் போது தோனியிடம் எதாவது பேசிக்கொண்டே இருப்பேன்.அவ்வளவு பெரிய ஜாம்பவான் அவர். அவருடன் நாம் விளையாடும்போது பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். என்னுடைய ஆட்டத்தை பார்த்து அவர் சில நேரங்களில் பாராட்டி இருக்கிறார். அதையெல்லாம் மறக்கவே முடியாது.

அவர் பல சமயங்களில் என்னை தொடர்ச்சியாக பாராட்டியதன் காரணமாக தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதற்கான ஊக்கத்தை எனக்கு அளிக்கிறது, இதன் காரணமாக எனது நம்பிக்கை மிகவும் அதிகமாக உள்ளது” எனவும் ஷிவம் துபே தோனியை பற்றி பேசியுள்ளார்.

Recent Posts

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

3 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

3 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

5 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

6 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

6 hours ago