நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பிரதமராகிறார். இதற்கிடையில், பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் வங்காளதேச கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான ஷாகிப் அல் ஹசன் வெற்றி பெற்றார்.
வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார். ஷகிப் அல் ஹசன் தேர்தல் பிரச்சாரத்திற்காக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் மேற்கு நகரமான மகுரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
வங்கதேசத்தில் 5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா..!
இந்நிலையில், மகுரா நாடாளுமன்ற தொகுதியில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஷகிப் அல் ஹசன் வெற்றி பெற்றார். ஷகிப் அல் ஹசன் மகுரா நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 185,388 வாக்குகள் பெற்றதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 45,993 வாக்குகள் மட்டுமே பெற்றார். அரசியலுக்கு வந்தாலும், ஷாகிப் அல் ஹசன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார். இரண்டு பொறுப்புகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…