ஒலிம்பிக் போட்டியில் விளையாட மாட்டேன்- செரீனா அறிவிப்பு..!

Default Image

ஒலிம்பிக் போட்டியில் விளையாட மாட்டேன் என செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட மாட்டேன் என அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

39 வயதான செரீனா வில்லியம்ஸ் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டிலும் தங்கம் வென்றார். செரீனா நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2000 ஆம் ஆண்டில் சிட்னியில் இரட்டையர் மற்றும் 2008 இல் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.

இரட்டையர் பிரிவில் மூத்த தங்கை வீனஸ் வில்லியம்ஸுடன் அனைத்து தங்கங்களையும் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் (2016), செரீனா ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தார். டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாமா என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்று ரோஜர் பெடரர் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்