காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக செரீனா வில்லிம்ஸ் அறிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,தனது தொடையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை என்று கூறி அடுத்த வாரம் நடைபெறவுள்ள யுஎஸ் ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
முன்னதாக,விம்பிள்டனில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்போட்டியை விட்டு கண்ணீருடன் வெளியேறினார்.இந்த நிலையில்,அமெரிக்க ஒபனில் இருந்து விலகுவதாக செரீனா அறிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:
“கவனமாக பரிசீலித்து, எனது மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரின் ஆலோசனையைப் பின்பற்றி, எனது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து முழுமையாக குணமடைய அமெரிக்க ஓபனில் இருந்து விலக முடிவு செய்தேன். நியூயார்க்,உலகின் மிக அற்புதமான நகரங்களில் ஒன்றாகும், மேலும் நான் விளையாடுவதற்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று, நான் ரசிகர்களைப் பார்ப்பதை இழக்கிறேன், ஆனால் தூரத்திலிருந்து அனைவரையும் உற்சாகப்படுத்துவேன்.உங்களின் ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி,விரைவில் நான் தங்களை சந்திக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
செரீனா வில்லியம்ஸ்,ஃப்ளஷிங் புல்வெளியில் ஆறு முறை சாம்பியன் பட்டம் மற்றும் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…