நாளை வெளியாகிறது ஐபிஎல் தொடருக்கான அட்டவணை – பிரிஜேஷ் பட்டேல் அறிவிப்பு.!

Default Image

ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் விரைவில் வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்க 8 அணியின் வீரர்கள் மற்றும் அமீரகம் சென்றடைந்து, கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர். பின்னர் சில அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனிடையே, இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஸ்பாசராக ட்ரீம் லவன் மற்றும் CRED நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனமும் ஒப்பந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்