பிரசித், ஷர்துல்க்கு பதில் அவரை தேர்வு பண்ணிருக்கலாம் – சல்மான் பட்!

Published by
பால முருகன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கிடையில், இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்தும் அடுத்த போட்டியில் எடுக்கப்படவேண்டிய வீரர்கள் பற்றியும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட்  கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர் ” பிரசித் கிருஷ்ணா அல்லது ஷர்துல் தாகூர்க்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை அணியில் இந்தியா எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆக்ரோஷமா விளையாடாதீங்க! சுப்மன் கில்லுக்கு அட்வைஸ் செய்த சுனில் கவாஸ்கர்!

ஏனென்றால், அர்ஷ்தீப் சிங் 135 கி.மீ வேகத்தில் பந்துவீசுகிறார், மேலும் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வார். சில டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் அவருடைய பந்துவீச்சு பெரிய அளவில் பேசப்படவில்லை என்று நினைக்கிறன்.

கடைசியாக நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் பந்துவீசி சரியில்லை. எதற்காக சொல்கிறேன் என்றால், அந்த போட்டியில் அவர்கள் பல எளிதான பவுண்டரி பந்துகளை கொடுத்தார்கள். என்னைப்பொறுத்தவரை இவர்கள் இருவரும் இருவரும் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுவார்கள் என்று தெரியவில்லை.

கடந்த போட்டியில் செய்த தவறு அது தான். எனவே, அந்த போட்டியை விடுங்கள் வருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது  நான் சொன்ன வீரர்களை தேர்வு செய்யவேண்டும். அப்படி தேர்வு செய்து விளையாடினாள் நன்றாக இருக்கும்” எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட்   தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

திமுக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள்! பதிலடி கொடுத்த தர்மேந்திர பிரதான்!

டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும்  என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…

32 minutes ago

அடுத்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எங்கே? போட்டியை நடத்தும் நாடு எது? விவரம் இதோ…

டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…

34 minutes ago

வார தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…

35 minutes ago

13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி: வயசாகிடுச்சுன்னு நினைக்காதீங்க… இனி தான் ஆரம்பமே – இளையராஜா நெகிழ்ச்சி!

சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…

2 hours ago

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வி..கோப்பையை வென்றபிறகு பேசிய விராட் கோலி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…

3 hours ago

LIVE: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முதல் சாதனை செய்த இளையராஜா வரை!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…

4 hours ago