தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத்..!

Published by
murugan

இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள்  70 வயத்திற்கு மேல் பதவியில் இருக்க கூடாது. தொடர்ந்து இரண்டு முறை பதவியில் இருந்தால் பின்னர் ஒரு வருடம் இடைவெளிக்குப் பின்னர் பதவிக்கு வர வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு பதவியில் இருக்க கூடாது போன்ற பல விதிமுறைகளை லோதா கமிட்டி பரிந்துரை செய்தது.

அதன்படி மாநிலம் கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 23ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதைத் தொடர்ந்து அனைத்து மாநில கிரிக்கெட் சங்கமும் தேர்தல் நடத்தி வருகிறது. சில மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து விட்டன. இந்நிலையில் இன்று  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர்  தேர்வு செய்வதற்காக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்றுநடந்தது.

இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

Published by
murugan

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

11 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

11 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

12 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

13 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

14 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago