இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் 70 வயத்திற்கு மேல் பதவியில் இருக்க கூடாது. தொடர்ந்து இரண்டு முறை பதவியில் இருந்தால் பின்னர் ஒரு வருடம் இடைவெளிக்குப் பின்னர் பதவிக்கு வர வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு பதவியில் இருக்க கூடாது போன்ற பல விதிமுறைகளை லோதா கமிட்டி பரிந்துரை செய்தது.
அதன்படி மாநிலம் கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 23ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாநில கிரிக்கெட் சங்கமும் தேர்தல் நடத்தி வருகிறது. சில மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து விட்டன. இந்நிலையில் இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் தேர்வு செய்வதற்காக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்றுநடந்தது.
இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…