ஆர்ச்சரின் அபார பந்துவீச்சால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஐபிஎல் தொடரில் 23 ஆம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி முதலில் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் தவான் களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணியில் அணியில் ஸ்கொர் உயருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 5 ரன்களில் தவான் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, 11 ரன்களில் ப்ரித்வி ஷா தனது விக்கெட்டை இழந்தார்.
22 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற, 5 ரன்கள் மட்டுமே அடித்து ரிஷப் பந்த் வெளியேறினார். அதன்பின் மார்கஸ் ஸ்டோலிஸ் – ஹெட்மேயர் கூட்டணியில் டெல்லி அணியில் ரன்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. 39 ரன்களில் ஸ்டோலிஸ் வெளியேற, அவரையடுத்து 45 ரன்கள் அடித்து ஹெட்மேயர் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்களும், திவேத்தியா, டை மற்றும் தியாகி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…