கோகோ கோலா பாட்டில்களை நீக்கிவிட்டு தண்ணீர் குடிக்க சொன்ன ரொனால்டோ..!

Published by
murugan

மேசையில் இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொண்ட ரொனால்டோ.

யூரோ 2020 கால்பந்து தொடர்நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் இன்று நடைபெறும் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன் நேற்று மாலையில் ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். அப்போது வந்தவுடன் இரு கோகோ கோலா குளிர்பான பாட்டில் அவருக்கு முன்னால் மேஜையில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.

உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு அதன் பிறகு தண்ணீர் பாட்டிலை எடுத்து ரசிகர்களிடம் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொண்டார். நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார். உடற்தகுதி அடிப்படையில் சிறிதும் கவனக்குறைவைக் கூட அவர் விரும்புவதில்லை என கூறப்படுகிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்கள் ஆரோக்கியமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ரொனால்டோவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்  மிகவும் வைரலாகி வருகிறது. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

37 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

56 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

10 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

11 hours ago