மேசையில் இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொண்ட ரொனால்டோ.
யூரோ 2020 கால்பந்து தொடர்நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் இன்று நடைபெறும் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன் நேற்று மாலையில் ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். அப்போது வந்தவுடன் இரு கோகோ கோலா குளிர்பான பாட்டில் அவருக்கு முன்னால் மேஜையில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு அதன் பிறகு தண்ணீர் பாட்டிலை எடுத்து ரசிகர்களிடம் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொண்டார். நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார். உடற்தகுதி அடிப்படையில் சிறிதும் கவனக்குறைவைக் கூட அவர் விரும்புவதில்லை என கூறப்படுகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்கள் ஆரோக்கியமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ரொனால்டோவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…