மேசையில் இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொண்ட ரொனால்டோ.
யூரோ 2020 கால்பந்து தொடர்நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் இன்று நடைபெறும் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன் நேற்று மாலையில் ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். அப்போது வந்தவுடன் இரு கோகோ கோலா குளிர்பான பாட்டில் அவருக்கு முன்னால் மேஜையில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு அதன் பிறகு தண்ணீர் பாட்டிலை எடுத்து ரசிகர்களிடம் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொண்டார். நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார். உடற்தகுதி அடிப்படையில் சிறிதும் கவனக்குறைவைக் கூட அவர் விரும்புவதில்லை என கூறப்படுகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்கள் ஆரோக்கியமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ரொனால்டோவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …