டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷாப் , சுப்மான் கில் விடுவிப்பு..!

இந்திய அணி , பங்களாதேஷ் அணி உடன் தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரிஷாப் , சுப்மான் கில் ஆகிய இடம்பெற்று இருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையே கடைசி மற்றும் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் ரிஷாப் , சுப்மான் கில் இருவரும் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இதை தொடர்ந்து இருவரும் தற்போது நடைபெற்று வரும் சையத் முஸ்டாக் அலி டி -20 தொடரில் இணைந்து உள்ளனர்.டெல்லி அணியில் ரிஷாப் பண்ட்டும் , பஞ்சாப் அணியில் சுப்மான் கில் இணைந்து உள்ளனர்.
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா காயம் ஏற்பட்டால் களமிறங்க ஆந்திராவை சார்ந்த விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத் உள்ளார்.