107 மீட்டருக்கு சிக்ஸ் விளாசிய ரிஷப் பண்ட்! வீரர்கள் கொடுத்த ரியாக்சன்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 1 ரன்னில் ரிஷப் பண்ட் சதத்தை தவறவிட்டார்.

Rishabh Pant Sixer

பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் செய்த சம்பவங்கள் தான் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். போட்டியின் போது அவர் அடித்த ஒரு அபாரமான சிக்ஸர் ரசிகர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களையும்  வியந்து பார்க்க வைத்தது.

போட்டியின் போது, 87வது ஓவரை டீம் சவூதி வீச வந்தார். அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட ரிஷப் பண்ட்  அந்த பந்தை மடக்கி அசுரத்தனமான வேகத்தில்  சிக்ஸர் விளாசினார். அந்த பந்து மிகவும் உயரத்திற்கு சென்றது. பிறகு, ரிப்பிளே காட்டும் போது பண்ட் அடித்த அந்த சிக்ஸர் 107 மீட்டர் என தெரிய வந்தது. சிக்ஸர் அடிக்கும்போதே, பந்து போகும் உயரத்தை பார்த்து பண்ட் வியப்பாக பார்த்தார்.

பிறகு எதிரணி வீரர்கள் வாயில் கையை வைத்து கொண்டு இவர் என்ன இப்படி விளாசுகிறார் என்கிற பாணியில் வியந்து பார்த்தனர். அதைப்போல, மற்றோரு கிரீஸில் நின்றுகொண்டு இருந்த கே.எல்.ராகுல் உங்க அடி சும்மா அதிருது என்பது போல சிரித்துக்கொண்டே ரசித்தார்.பண்ட் அடித்த சிக்ஸர்களுக்கு அவர்கள் கொடுத்த ரியாக்சன்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிக்ஸர் விளாசி பண்ட் ரசிகர்களை மகிழ்வித்தாலும் கடைசியில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டு அவரும் திருப்தி இல்லாமல் பெவிலியனுக்கு சென்றார். ஏனென்றால், அதிரடி கலந்த நிதானமாக விளையாடி வந்த பண்ட் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 1 ரன் எடுத்திருந்தால் சதம் விளாசி இருக்கலாம்.

ஆனால் , அந்த பந்தை மெதுவாக தட்டமுயன்று முயன்ற போது அவுட் ஆகி வெளியேறினார். வெளியேறிய போது ரசிகர்கள் அமைதியாக இருந்தனர். பண்ட்டும் மகிழ்ச்சியில்லாமல் சோகத்துடன் மேலே பார்த்துக்கொண்டு பெவிலியனுக்கு சென்றார். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் பண்ட் சிறப்பாக விளையாடினார் என பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்