உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்றது.இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அதன்படி,உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 7 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.கடைசி நாளான நேற்று 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் மற்றும் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றனர். இருவரும் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் தாய்லாந்து ஜோடியை 17-7 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டர் பிரிவில் இந்திய அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன்மூலம்,இந்தியா இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
மேலும்,நார்வே அணி 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.பிரான்ஸ் அணி 3 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…