என்ஓசி வழங்க மறுப்பு..ஐபிஎல்லில் முஜீப் உர் ரஹ்மான் உட்பட 3 வீரர்கள் விளையாடுவது சந்தேகம்..!

Published by
murugan

முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் மற்றும் ஃபசல் ஃபரூக்கி ஆகியோர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் லீக்குகளில் விளையாட தேசிய மத்திய ஒப்பந்தத்தை ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ஜனவரி 1, 2024 முதல் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து தங்களை விடுவிக்கவும், தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான தங்கள் சம்மதத்தை பரிசீலிக்குமாறு விருப்பம் தெரிவித்தனர். 

என்ஓசி வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு: 

இந்நிலையில், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஃபரூக்கி ஆகிய மூன்று வீரர்களை தேசிய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. இது தவிர, இந்த மூன்று வீரர்கள் மீதும் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த மூன்று வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களையும் நிறுத்தியுள்ளது. இதனுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வீரர்களுக்கு என்ஓசி வழங்குவதில்லை என்றும், ஏற்கனவே இருக்கும் என்ஓசியை ரத்து செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால் ஐபிஎல் 2024 விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.  ஐபிஎல் 2024 அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024 ஏலத்தில் முஜீப் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் நவீன்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியாலும்,  ஃபசல்ஃபாக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாலும் தக்கவைக்கப்பட்டனர்.

ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற நவீன் உல் ஹக்:

வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்றால் என்ஓசி வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு நவீன் உல் ஹக் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உலகக்கோப்பையின் போது நவம்பர் 7 அன்று  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நவீன் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார்.

உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான்:

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

10 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

11 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

13 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

14 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

15 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

15 hours ago