என்ஓசி வழங்க மறுப்பு..ஐபிஎல்லில் முஜீப் உர் ரஹ்மான் உட்பட 3 வீரர்கள் விளையாடுவது சந்தேகம்..!

Published by
murugan

முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் மற்றும் ஃபசல் ஃபரூக்கி ஆகியோர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் லீக்குகளில் விளையாட தேசிய மத்திய ஒப்பந்தத்தை ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ஜனவரி 1, 2024 முதல் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து தங்களை விடுவிக்கவும், தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான தங்கள் சம்மதத்தை பரிசீலிக்குமாறு விருப்பம் தெரிவித்தனர். 

என்ஓசி வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு: 

இந்நிலையில், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஃபரூக்கி ஆகிய மூன்று வீரர்களை தேசிய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. இது தவிர, இந்த மூன்று வீரர்கள் மீதும் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த மூன்று வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களையும் நிறுத்தியுள்ளது. இதனுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வீரர்களுக்கு என்ஓசி வழங்குவதில்லை என்றும், ஏற்கனவே இருக்கும் என்ஓசியை ரத்து செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால் ஐபிஎல் 2024 விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.  ஐபிஎல் 2024 அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024 ஏலத்தில் முஜீப் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் நவீன்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியாலும்,  ஃபசல்ஃபாக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாலும் தக்கவைக்கப்பட்டனர்.

ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற நவீன் உல் ஹக்:

வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்றால் என்ஓசி வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு நவீன் உல் ஹக் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உலகக்கோப்பையின் போது நவம்பர் 7 அன்று  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நவீன் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார்.

உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான்:

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

14 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

14 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago