என்ஓசி வழங்க மறுப்பு..ஐபிஎல்லில் முஜீப் உர் ரஹ்மான் உட்பட 3 வீரர்கள் விளையாடுவது சந்தேகம்..!

முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் மற்றும் ஃபசல் ஃபரூக்கி ஆகியோர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் லீக்குகளில் விளையாட தேசிய மத்திய ஒப்பந்தத்தை ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ஜனவரி 1, 2024 முதல் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து தங்களை விடுவிக்கவும், தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான தங்கள் சம்மதத்தை பரிசீலிக்குமாறு விருப்பம் தெரிவித்தனர். 

என்ஓசி வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு: 

இந்நிலையில், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஃபரூக்கி ஆகிய மூன்று வீரர்களை தேசிய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. இது தவிர, இந்த மூன்று வீரர்கள் மீதும் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த மூன்று வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களையும் நிறுத்தியுள்ளது. இதனுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வீரர்களுக்கு என்ஓசி வழங்குவதில்லை என்றும், ஏற்கனவே இருக்கும் என்ஓசியை ரத்து செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால் ஐபிஎல் 2024 விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.  ஐபிஎல் 2024 அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024 ஏலத்தில் முஜீப் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் நவீன்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியாலும்,  ஃபசல்ஃபாக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாலும் தக்கவைக்கப்பட்டனர்.

ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற நவீன் உல் ஹக்:

வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்றால் என்ஓசி வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு நவீன் உல் ஹக் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உலகக்கோப்பையின் போது நவம்பர் 7 அன்று  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நவீன் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார்.

உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான்:

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்