டென்னிஸில் ரஃபேல் நடால் ஓய்வு? விளக்கமளித்த நடால்!

Published by
அகில் R

ரஃபேல் நடால் : டென்னிஸில் நம்பர் 1 வீரராக திகழ்ந்த ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறிவுடன் அவரது ஓய்வு குறித்த விளக்கத்தை ரசிகர்களுக்கு அளித்திருந்தார்.

நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் தொடரானது கடந்த மே-26ம் தேதி அன்று பாரிஸ்ஸில் உள்ள ஸ்டேட் ரொலாண்ட் கரோஸ் மைதானத்தில் தொடங்கியது.  இந்த தொடரில் மே-27ம் தேதி நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் முதலில் இருந்தே சிறப்பாக ஆதிக்கம் செலுத்தி விளையாடினார் அலெக்சாண்டர், ரஃபேல் நடால் கடுமையாக நெருக்கடி கொடுத்தும் அலெக்சாண்டர் அந்த போட்டியை 3-6, 6-7, 3-6 என நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த தோல்வியின் மூலம் ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

மேலும், இந்த பிரெஞ்சு ஓபன் தொடர் தான் அவரது கடைசி தொடர் எனவும் இதன் பிறகு அவர் ஓய்வு பெறுவார் எனவும் அவரது ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு ரஃபேல் நடால் தனது ஓய்வு குறித்து பேசி இருந்தார். இவர் பேசிய போது, “இங்கு நான் விளையாடியது தான் எனது கடைசி போட்டியா? என்று எனக்கு தெரியவில்லை. என்னால் 100% சதவீதம் அதை இப்போது கூற முடியவில்லை.

ஒருவேளை இதுதான் என் கடைசி போட்டி என்றால், அதை முழுக்க முழுக்க அனுபவித்து விளையாடி இருக்கிறேன். மேலும், இன்று எனது இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க கஷ்டமாக இருக்கிறது. இதே மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட நான் மீண்டும் வருவேன் என நம்புகிறேன். அது மட்டும் தான் எனக்கு இப்பொது உத்வேகம் அளிக்கிறது. அதற்காக நான் முழுமையாக என்ன தயார்ப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என கூறி இருந்தார்.

இதன் மூலம், ரஃபேல் நடால் அவரது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் அவரது ரசிகர்களுக்கும் ஆறுதல் அளித்துள்ளார். இவர் 14 முறை பிரெஞ்சு தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், 22 முறை கிராண்ட்ஸ்லாம் (Grand Slam) தொடரையும் கைப்பற்றி ஒரு காலத்தில் நம்பர் 1 டென்னிஸ் வீரராக கோடி கட்டி பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

We love you too Rafa, and we hope to see you again next year ????#RolandGarros pic.twitter.com/7hX4Gw46WE

Published by
அகில் R

Recent Posts

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

9 hours ago

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…

10 hours ago

பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

10 hours ago

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

10 hours ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

11 hours ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

12 hours ago