இந்திய தொடரில் இருந்து விலகிய ரபடா..!

Default Image

ஆஸ்திரேலியா அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டி 20 போட்டியின்போது தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடாவிற்கு  இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு நாள் தொடரிலும் , இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் ரபடா விலகியுள்ளார். வருகின்ற 12-ம் தேதி ஒருநாள் தொடர் தொடக்க உள்ளது.

இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் என்று தென்ஆப்பிரிக்க மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். வருகின்ற  29-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் ரபடா டெல்லி அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்