ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

குஜராத் டைடன்ஸ் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரை ரூ. 15.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

kagiso rabada gujarat titans butler jos

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு அணிகளும் ஏலத்தில் எடுக்க போட்டிபோட்டுக்கொண்டு வருகிறது.

ஏலத்தில் துல்லியமாக செயல்பட்ட குஜராத் அணி 2 முக்கிய வீரர்களை குறி வைத்து தூக்கியுள்ளது.  அவர்கள் யார் என்றால் அதிரடியான தொடக்கம் கொடுக்கும் பட்லர் மற்றும் பந்துவீச்சில் எதிரணியை பறக்கவிடும் ரபாடா ஆகியோரை தான்.  இரண்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள் முன் வந்த நிலையில், கடைசியில் பெரிய தொகை கொடுத்து இரண்டு வீரர்களையும் குஜராத் ஏலத்தில் எடுத்து.

அதன்படி, ரபாடா 10.75 கோடிக்கும், பட்லர் 15.75 கோடிக்கும் குஜராத் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு ரபாடா பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். அதைப்போல பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வந்தார். இந்த முறை அதாவது அடுத்த ஆண்டு இருவரும் குஜராத் அணிக்காக விளையாடவிருக்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin