#IPL2020: பந்து வீச்சில் மிரட்டிய ஹைதராபாத்.. 127 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப்..!

Default Image

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, துபாயில் நடைபெற்றுவரும் நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், மந்தீப் சிங் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய மந்தீப் சிங் 17 எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து இறங்கிய கிறிஸ் கெயில் 20 ரன்கள் அடித்த விக்கெட்டை இழந்தார்.

பின்னர், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே எல் ராகுல் 27 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மத்தியில் களம் கண்ட நிக்கோலஸ் பூரன் கடைசி வரை களத்தில் நின்று 32* ரன்கள் குவித்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இப்போட்டியில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 127 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கயுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்