இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவு லீக் போட்டியில் மும்பை அணியும் , பரோடா அணியும் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய பரோடா அணி முதல்இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 4 விக்கெட்டை இழந்து 409 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் பிரித்வி ஷா இரட்டை சதம் விளாசினார். பிரித்வி ஷா 179 பந்திற்கு 202 ரன்கள் குவித்தார்.அதில் 19 பவுண்டரி , 7சிக்ஸர் அடங்கும். இதனால் பரோடா அணிக்கு , மும்பை அணி 534 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதை தொடர்ந்து இறங்கிய பரோடா அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்தனர்.இதை தொடர்ந்து இன்று விளையாடிய பரோடா அணி224 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதனால் இப்போட்டியில் மும்பை அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையின் 20 வயதான தொடக்க வீரர் பிருத்வி ஷா ரஞ்சி டிராபி வரலாற்றில் மூன்றாவது அதிவேகமாக இரட்டை சதத்தை அடித்து உள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரஞ்சிக்கோப்பை தொடரில் (123 பந்தில் இரட்டைசதம் அடித்து சாதனையைப் படைத்துள்ளார்.அதைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜேஷ் போரா 156 பந்தில் இரட்டைசதம் அடித்து உள்ளார்.தற்போது மூன்றாவது இடத்தில் பிருத்வி ஷா உள்ளார்.
பிரித்வி ஷா ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 8 மாதம் தடைக்கு பின் தற்போது தான் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…