கடைசி நிமிடத்தில் வெற்றியை தட்டி சென்ற போர்ச்சுகல்..! செக்கியாவை வீழ்த்தி 2-1 என த்ரில் வெற்றி ..!

Published by
அகில் R

யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியானது விறுவிறுப்பின் உச்சத்தில் நடைபெற்றது.

யூரோ கோப்பை தொடரின் ‘F’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் போர்ச்சுகல் அணியும் செக்கியா (செக் குடியரசு தேசிய கால்பந்து அணி) அணியும் ஜெர்மனியில் உள்ள ரெட் புல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியானது, இந்த யூரோ கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்கு முதல் போட்டியாகும். இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோவிற்கு இது 6-வது யூரோ கோப்பை தொடராகும்.

ஒரு வீரராக 6 யூரோ கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.  அதனை தொடர்ந்து விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளுமே கோலை அடிக்க கடுமையாக முயற்ச்சி செய்வார்கள். ஆனால் இரண்டு அணிகளுமே கோல்களை அடிக்க தவறியும், எதிரணியின் கோல்களை தடுத்தும் சிறப்பாக விளையாடினார்கள்.

இதன் காரணமாக முதல் பாதி நிறைவடையும் போது 0-0 என இரண்டு அணிகளுமே கோல் அடிக்காமலே இருந்தனர். ஆனால், இரண்டாம் பாதியானது முதல் பாதிக்கு அப்படியே தலைகீழாகவே தொடங்கியது. விறுவிறுப்பாக தொடங்கிய இரண்டாம் பாதியின் 62’வது நிமிடத்தில் செக்கியா வீரரான லூகாஸ் ப்ரோவோட் முதல் கோலை அடித்து அசத்தினார்.

இதன் மூலம் 0-1 என செக்கியா அணி  முன்னிலையில் பெற்று வந்தது. அதனை தொடர்ந்து  இரு அணிகளும் விளையாட போட்டியின் 69’வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் அடித்த ஒரு ஷாட்டை செக்கியா கோல்கீப்பர் தடுப்பார். அப்போது அந்த பந்து செக்கியா வீரரான  ராபின் ஹரானாக் உடம்பில் பட்டு கோலாக மாறிவிடும்.

இதனால் 1-1 என போர்ச்சுகல் அணி சமநிலையில் போட்டியை மாற்றினார்கள். இதனால் மேலும், விறுவிறுப்பாக மாறிய போட்டியானது இறுதி கட்டத்தை நெருங்கியது. அதன்பின் போட்டியின் 90 நிமிடங்கள் நிறைவடைந்ததும் 2 அணிகளும் கோல் அடிக்காமல் திணறுவார்கள். அப்போது களநடுவர்கள் 4 நிமிடங்கள் கூடுதல் நிமிடங்கள் அளிப்பார்கள்.

அப்போது தான் போட்டியின் 90+2 வது நிமிடத்தில் செக்கியா அணி செய்த ஒரு சிறு தவறினால் போர்ச்சுகல் வீரரான கான்சிகாவோ அசத்தலாக கோல் அடித்து போர்ச்சுகல் அணியை த்ரில்லாக வெற்றி பெற வைத்திருப்பர். இந்த வெற்றியின் மூலம் போர்ச்சுகல் அணி புள்ளிபட்டியலில் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது.

Published by
அகில் R

Recent Posts

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

51 minutes ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

1 hour ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

2 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

3 hours ago