Georgia vs Portugal [file image]
யூரோ2024: இந்த ஆண்டில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போர்சுகள் அணியும், ஜார்ஜியா அணியும் ஜெர்மனியில் உள்ள வெல்டின்ஸ்-அரீனா மைதானத்தில் மோதியது.
விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இந்த போட்டியின் ஆரம்பத்தில் 2-வது நிமிடத்திலே ஜார்ஜியா வீரரான குவரட்ஸ்கெலியா அற்புதமான ஒரு கோலை அடித்து அசத்தி இருப்பார். இதன் மூலம் தொடக்கத்திலே போட்டி சூடு பிடிக்க தொடங்கியது.
அதன் பின் ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் போர்சுகள் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஒரு பிரீ-கிக் கிடைக்கும் அதனையும் அவர் சரியாக அடித்திருப்பார். ஆனால், கோல் கீப்பர் அபாரமாக அதை தடுத்திருப்பார்.
அதை தொடர்ந்து போட்டியின் முதல் பாதியில் 1-0 என ஜார்ஜியா அணி முன்னிலை பெற்றிருப்பார்கள். அதன் பின் இரண்டாம் பாதியில் 56’வது நிமிடத்தில் ஜார்ஜியா அணிக்கு ஒரு பெனால்டி கிடைத்தது, அதையும் மிகுடாட்ஸே சரியாக பயன்படுத்தி கோலை அடித்து அசத்தியிருப்பார்.
அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் கிடைத்த கோல் வாய்ப்புகளை தவறவிட்டிருப்பார்கள். அதிலும் ரொனால்டோவுக்கு கிடைத்த வாய்ப்பையும் அவர் தவறவிட்டிருப்பார். ஆட்ட நேரம் முடிந்தும் 4 நிமிடங்கள் கூடுதல் கொடுத்தும் போர்சுகள் அணியால் ஒரு கோலை கூட பதிவு செய்ய முடியவில்லை.
இதன் மூலம், 2-0 என முன்னிலை பெற்று போர்சுகள் அணியை ஜார்ஜியா அணி வீழ்த்தியது. இதனால் அடுத்த சுற்றான ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது ஜார்ஜியா அணி. ஏற்கனவே, போர்சுகள் அணி இந்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…