பாரிஸ் ஒலிம்பிக் : தடை செய்யப்பட்ட நாட்டிற்கு தங்கப்பதக்கம் ..! எப்படி தெரியுமா?

Published by
அகில் R

பாரிஸ் : இந்த ஆண்டிற்கான சம்மர் ஒலிம்பிக் போட்டிகளானது பிரான்சில் உள்ள பாரிசில் கடந்த ஜூலை-26 தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடரில், போட்டிகள் தொடங்குவதற்கு முன் ஒரு சில காரணங்களுக்காக சில நாடுகளுக்கு தடை விதிப்பது வழக்கம் தான்.

அதே போல இந்த ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு முன் ரஷியா மற்றும் பெலருஸ் எனும் 2 நாடுகளுக்கு சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்திருந்தது. அதற்கு காரணம் ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தான். ஒலிம்பிக் தொடர் தொடங்குவதற்கு முன்னரே இதனை நிறுத்த சொல்லி ஒலிம்பிக் கமிட்டி கூறியும் போரை நிறுத்தத்தால் தடை விதித்தனர்.

மேலும், அந்த போருக்கு உதவி செய்ததன் காரணமாக பெலருஸ் நாட்டையும் தடை விதித்தனர். இதே போல 2016-ம் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ரஷியா நாட்டை தடை விதித்திருந்தனர். 2010-ம் ஆண்டு குவைத் மற்றும் 2000-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் என தடைவித்திருந்தனர். ஆனால் இந்த ஒலிம்பிக்கில் தடை செய்யப்பட்ட நாடான பெலாரூஸில் இருந்து 3 பதக்கங்களை வென்றுள்ளனர். அது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.

அதே சாத்தியம் தான் நாடுகள் செய்த சில தவறால் தடை விதித்தாலும், அந்நாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் விளையாட விருப்பம் உள்ளதால் கலந்து கொள்வதற்கு வேறு ஒரு வழியில் ஒலிம்பிக் கமிட்டி வாய்ப்பும் கொடுக்கிறார்கள். அது என்னவென்றால் தடை செய்யப்பட்ட நாட்டிலிருந்து விளையாட வரும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது நாடு சார்பாக இல்லாமல் தனியாக அதாவது தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்கள் (Individual Neutral Athletes) எனும் பிரிவின் கீழ் தங்களது பெயர்களை பதிவு செய்து விளையாடலாம்.

அப்படி பெலரூஸ் நாட்டிலிருந்து வந்து விளையாடிய 3 வீரர்கள் தற்போது பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் மட்டும் இவான் லிட்வினோவிச் எனும் வீரர் தங்கப்பதக்கமும் மற்றும் வியாலேதா பார்ட்ஜிலோஸ்காயா எனும் வீராங்கனை வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

மேலும், யௌஹேனி ஜலட்டி எனும் வீரர் படகோட்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தி இருக்கிறார். இந்த ஒலிம்பிக்கில் பல ஸ்வாரஸ்யமான விஷயங்களில் நடைபெற்றுள்ளது அதில் ஒரு சுவாரஸ்யமான விஷியமாக இதுவும் பார்க்கப்படுகிறது.

Published by
அகில் R

Recent Posts

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

40 minutes ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

55 minutes ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

1 hour ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

2 hours ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

2 hours ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

3 hours ago