பாரிஸ் : பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் தற்போது 33-வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் சார்பாக பல வீரர் மற்றும் வீராங்கனைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணி இது வரை 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மகளீருக்கான 50கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகட் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தற்போது இறுதி போட்டி வரை வந்திருந்தார்.
நேற்று மல்யுத்த அரையிறுதி சுற்றில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மகளிர் மல்யுத்தத்தில் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில் அமெரிக்க வீராங்கனையுடன் இன்று இறுதி போட்டியில் மோதவிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் அந்த இறுதி போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கி எடை பிரிவுக்கான போட்டியில் அவரது எடை 100 கிராம் அதிகம் உள்ளதால் அதாவது 50.100 கிராம் உள்ளதன் காரணமாக அவரை இறுதி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது ஒலிம்பிக் கமிட்டி. இந்த தகுதி நீக்கத்தில் சந்தேகம் இருப்பதாக பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவிற்கு கண்டிப்பாக இந்த மல்யுத்த போட்டியில் தங்கம் அல்லது ஒரு வெள்ளி பதக்கம் நிச்சயம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்த இந்திய ரசிகர்கள் இந்த செய்தி ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 1 கிலோ கூட அதிகம் இல்லை வெறும் 100கிராம் எடை அதிகம் இருந்தன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இதனை எந்த ரசிகர்களாலும் ஏற்று கொள்ள முடியாத வண்ணம் உள்ளது.
மேலும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பதக்க கனவு பறிபோனதென்றே கூறலாம். தற்போது, மல்யுத்த இறுதி போட்டியானது நடைபெறாததால் தங்கப் பதக்கம் அமெரிக்கா வீராங்கணைக்கு அளிப்பார்கள் எனவும், அதே போல வெள்ளிப் பதக்கம் யாருக்கும் அளிக்கப்படாது எனவும், வெண்கல பதக்கத்திற்கான போட்டி நடைபெறும் எனவும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…