பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : ‘ஒரே வாய்ப்பு தான்’ ! ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா செய்த புதிய சாதனை!

Published by
அகில் R

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஈட்டி எறிதல் போட்டியானது இன்று நடைபெற்றது. ஏனெனில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கலந்து கொள்வார் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பு என்பது இருந்து வந்தது.

இந்நிலையில், அதற்கான தகுதி சுற்றுப் போட்டியானது இன்று நடைபெற்றது. 32 வீரர்கள் பங்கேற்று விளையாடும் இந்த தகுதி சுற்று 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 32 வீரர்களும் இரண்டு பிரிவுகளாக (A&B) பிரிக்கப்பட்டு விளையாடுவார்கள்.

இந்த தகுதி சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு வீரருக்கும் 6 முறை வாய்ப்பளிக்கப்படும். இதில் யார் அதிக தூரத்தில் ஈட்டியை எறிகிறார்களோ அவர்களே தகுதி பெறுவார்கள் அதிலும் குறிப்பாக 84 மீட்டர் அல்லது அதற்கு மேல் ஈட்டி எறிந்தால் மட்டுமே தகுதி பெற முடியும்.

இந்நிலையில், 2-வது பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு ஈட்டியை வீசினார். அதில் முதல் வாய்ப்பிலேயே அவர் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நேராக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் இதுவரை யாரும் இந்த தூரத்தில் ஈட்டி எரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தகுதி சுற்றில் அதிக தூரம் ஈட்டியை எரிந்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் எறிந்த தூரமே இந்த தகுதி சுற்றில் அதிகமான தூரமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியானது வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று இரவு 11.55 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். அப்போது இவர் எறிந்த ஈட்டியின் தூரம் 87.58 மீட்டர் தூரம் ஆகும். இதனால், கடந்த ஆண்டில் தங்கம் வென்று கொடுத்த அந்த மீட்டரை விட தற்போது தகுதி சுற்றில் அவர் எறிந்த தூரம் அதிகமாக இருப்பதால் இந்த ஒலிம்பிக்கிலும் அவர் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago