டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-10, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மனோஜ் சர்காரை வீழ்த்தினார்.
இந்நிலையில்,தற்போது நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸ், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு எஸ்எல் 3 போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத்,உக்ரைனின் ஒலெக்சாண்டர் சைர்கோவை 21-12, 21-9 என்ற கணக்கில் 30 நிமிடங்களுக்குள் தோற்கடித்து,அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.இதனால்,இந்தியாவுக்கு ஒரு பதக்கம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும்,பாரா பேட்மிண்டன் அரையிறுதி மற்றும் பதக்கப் போட்டிகள் செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும்.
முன்னதாக ,இன்று காலை நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துடுப்பு படகுபோட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…