பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டி கடந்த 27-ம் தேதி கராச்சியில் நடைபெற இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது.
நேற்று இரண்டாவது போட்டி கராச்சியில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
306 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரராக தனுஷ்க ,
சதீரா இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே இலங்கை அணி விக்கெட்டை பறிகொடுத்தது.
தனுஷ்க 14 , சதீரா 6 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து இலங்கை அணி விக்கெட்டை இழந்து 28 ரன்னிற்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது. பின்னர் மத்தியில் இறங்கிய ஜெயசூரியா , தாசுன் இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி வந்த ஜெய்சூர்யா சதம் அடிக்காமல் 96 ரன்களில் வெளியேறினார். பின்னர் தாசுன் 68 ரன்களில் வெளியேற இறுதியாக இலங்கை அணி 46.5 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பந்து வீச்சில் உஸ்மான் 5 விக்கெட்டை பறித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…