சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.
பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2003-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டியில் அறிமுகமான முகமது ஹபீஸ், கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார். 2020 டி20 உலகக் கோப்பை தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அவர் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால், கொரோனா காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததால் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். முகமது ஹபீஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 55 டெஸ்ட், 218 ஒருநாள் மற்றும் 119 டி20 போட்டிகளில் விளையாடி 12,780 ரன்களையும், 253 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார்.
இன்று நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பெருமையுடனும் திருப்தியுடனும் விடைபெறுகிறேன் என்று ஹபீஸ் தெரிவித்துள்ளார். உண்மையில், நான் ஆரம்பத்தில் நினைத்ததை விட அதிகமாக சம்பாதித்து சாதித்துள்ளேன்.
அதற்காக எனது சக கிரிக்கெட் வீரர்கள், கேப்டன்கள், துணை ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது கேரியரில் எனக்கு உதவியது எனவும் குறிப்பிட்டார். 18 ஆண்டுகளாக பாகிஸ்தான் தேசிய கிட் அணிவதற்கு தகுதியானவராக கருதப்பட்டதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…