உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராக்கு நீதா அம்பானி வாழ்த்து.!

Published by
செந்தில்குமார்

புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் 2023ல் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றதற்காக, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றதற்காக நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உலக தடகள அரங்கில் மூவர்ணக் கொடிகள் உயர உயர இந்தியாவிற்கு இது ஒரு முக்கியமான நாள்.”

“டிபி மனு, பருல் சௌத்ரி, ஜெஸ்வின் ஆல்ட்ரின், எங்கள் ஆடவர் ரிலே டீம் மற்றும் எங்களின் சொந்த ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தடகள வீரர் கிஷோர் ஜெனா ஆகியோருக்கும் உலக அரங்கில் இந்தியாவைப் பெருமைப்படுத்துவதில் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளுக்காக வாழ்த்துகள்.”

“ரிலையன்ஸ் அறக்கட்டளையில் உள்ள நாங்கள், இந்திய தடகள கூட்டமைப்புடன் இணைந்து, அடிமட்டத்திலிருந்து பெருமையை நோக்கிய இந்திய விளையாட்டு வீரர்களின் பயணத்தில் எங்கள் பங்களிப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்!” என்று நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

2 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

3 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

4 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

5 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

5 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

6 hours ago