ஃபிஃபா உலகக்கோப்பையில் அர்ஜென்டினா வெற்றியைக் கொண்டாடும் சவுதி அரேபியா இன்று தேசிய விடுமுறையாக அறிவித்த்துள்ளது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் நேற்று மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்று வரலாறு படைத்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை முன்னிலை பெறச்செய்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா அணி இரண்டு கோல்களை அடித்து ஆதிக்கம் செய்தது. அர்ஜென்டினா அணியை கோல் அடிக்கவிடாமல் சவுதி அரேபியா கோல்கீப்பர் சிறப்பாக தடுத்தார்.
போட்டியின் முடிவில் சவுதி அரேபியா 2-1 என்று அர்ஜென்டினாவை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் சவுதி அரேபியா நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அர்ஜென்டினாவுக்கு எதிரான இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் இன்று (புதன்கிழமை) தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…