டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை மகளிர் 48 – 51 கிலோ எடை பிரிவில் மேரிகோம்,கொலம்பியாவின் விக்டோரியாவிடம் தொல்வியுற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நடைபெற்ற மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மேரிகோம், டொமினிகா குடியரசின் மிக்குவேலினாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.இதன்மூலம்,முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றார்.
இந்நிலையில்,இன்று நடைபெற்ற 48 – 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மேரி கோம்,கொலம்பியாவின் இங்க்ரிட் வாலென்சியா விக்டோரியாவை எதிர்கொண்டார்.இப்போட்டியில்,மேரி கோம் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தினார்.இருப்பினும்,3-2 என்ற கணக்கில் மேரி கோமை வீழ்த்தி விக்டோரியா வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,மேரி கோம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் விக்டோரியா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
ஆனால்,மேரி கோம் கடந்த மே 21 ம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியை வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டார்.மேலும்,மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…