குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக மேரி கோம் அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம்,  குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆறு முறை உலக சாம்பியனும், 2012 ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான மங்டே சுங்னிஜாங் மேரி கோம் வயது கரணமாக அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “என் இதயத்திலிருந்து நான் சொன்னால், நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறேன்” என்று மேரி கோம் கூறினார். “நான் இன்னும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட விரும்புகிறேன்.

ஆனால் வயது வரம்பு காரணமாக இந்த ஆண்டு முதல் என்னால் போட்டியிட முடியவில்லை என்று ஒரு நிகழ்வில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்