Manchester City[file image]
சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளது.
எடிகாட் மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியும், வெஸ்ட் ஹாம் அணிகளும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியின் 2-வது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான ஃபில் ஃபோடென் அசத்தலான கோலை அடித்து, தங்களது அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.
போட்டியில் தொடர்ந்து விறுவிறுப்பாக இரு அணிகளின் வீரர்களும் விளையாடினார். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் மீண்டும் ஃபில் ஃபோடென் தனது அணிக்காக போட்டியின் 2-வது கோலை அடித்து அசத்தினார். இதனால் 2-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னிலை வகித்தது. எதிர்த்து கடினமாக விளையாடிய வெஸ்ட் ஹாம் அணி போட்டியின் 42-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெஸ்ட் ஹாம் அணி வீரர் முகமது குடுஸ் அசத்தலாக கோலை அடித்தார்.
இதனால் முதல் பாதி நிறைவு பெறுகையில் 2-1 என்ற கண்ணகில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து அனல் பறக்க தொடங்கிய இரண்டாம் பாதியில், போட்டியின் 52-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான ரோட்ரி அணியின் 3-வது கோலை பதிவு செய்தார். இதனால் 3-1 என்ற கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி மேலும் முன்னிலை வகித்தது.
அதன் பிறகு வெஸ்ட் ஹாம் அணி கடுமையாக முயற்சி செய்தும் ஒரு கோலை கூட பதியிலடியாக பதிவு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக போட்டியின் முடிவில் மான்செஸ்டர் அணி 3-1 என்ற கணக்கில் வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார்கள். மேலும், இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது.
அத்துடன் முதலாவதாக இடம் பிடித்ததால் பரிசுத்தொகையாக 62.3 மில்லியன் பவுண்டுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்த ஆர்செனல் அணி 59.1 மில்லியன் பவுண்டுகளையும், 3-வது இடத்தை பிடித்த லிவர்பூல் அணி 56 மில்லியன் பவுண்டுகள் மற்றும் 4-வது இடத்தை பிடித்த ஆஸ்டன் வில்லா 52.9 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகையையும் பெற்றுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…