பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது…ஐபிஎல் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம்…

Default Image

கோடைகால கொண்டாட்டமாக 13-வது ஐபிஎல் தொடர் வருகின்ற  29-ம் தேதி தொடங்கி மே 24 -ம் தேதி வரை நடைபெறுகிறது.மொத்தம் 9 மாநிலங்களில் 60 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரசால் இந்த வருட ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா ..?  என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வருவதால்  ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களுக்கு ஆயிரக்கணக்கான  ரசிகர்கள் வருவார்கள் அதனால் கொரோனா வைரஸ் பரவவாய்ப்பு உள்ளதாக கூறி மகாராஷ்டிரா , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஐபிஎல் தொடர் நடைபெற வேண்டாம் என எதிர்ப்பை  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்