தற்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
இதை தொடர்ந்து பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் ,டாம் பாண்டன்ஆகிய இருவரும் இறங்கினர்.அதிரடியாக விளையாடிய டாம் பாண்டன் 16 பந்தில் 2 பவுண்டரி , 7 சிக்சர்கள் அடித்து அரைசதம் அடித்தார்.பின்னர் 19 பந்தில் 56 ரன்கள் விளாசி தனது விக்கெட்டை இழந்தார்.
இப்போட்டியில் டாம் பாண்டன் சுழற்பந்து வீச்சாளர் அர்ஜூன் நாயர் ஓவரில் முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை அதன்பின் வீசிய ஐந்து பந்துகளையும் சிக்ஸர் விளாசினார். நேற்றைய போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வெல்த் முறைப்படி போட்டி 8 ஓவராக குறைக்கப்பட்டது.
இறுதியாக 8 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து பிரிஸ்பேன் ஹீட் ஆணி119 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய சிட்னி தண்டர் அணி 5 ஒவரில் 4 விக்கெட்டை இழந்து 40 ரன்கள் எடுத்ததால் சிட்னி தண்டர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் 5 சிக்ஸர் விளாசிய டாம் பாண்டனை சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடருக்கான நடந்த ஏலத்தில் கொல்கத்தா அணி அடிப்படை ஏலத்தொகையான ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.அப்போது டாம் பாண்டனை ஏன் இவரை அணியில் எடுத்தார்கள் என பலர் விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…