இரண்டாவது டெஸ்ட் :கோலியின் 23-வது அரை சதம்..!

Default Image

நேற்று ஈடன் கார்டனில்  நடைபெற்ற பகல்/இரவு ஆட்டம் இந்தியா vs பங்களாதேஷ் டாஸ் வென்று பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து 106 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
பிறகு களம் இறங்கிய இந்திய தொடக்க வீரரான ரோஹித் 21, மாயங்க் அகர்வால் 14  ரன்களில் ஆட்டம் இழந்தனர்.பின்னர் இறங்கிய புஜாரா நிலைத்து விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார்.இதை தொடர்ந்து 55 ரன்னில் தனது விக்கெட்டை  இழந்தார்.
புஜாராவை தொடர்ந்து கிங் கோஹ்லி பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளரின் பந்துகளை விரட்டி அடித்து. கோலி டெஸ்ட் போட்டியில் தனது 23-வது அரை சதத்தை ஈடன் கார்டனில் நிறைவு செய்தார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி  மூன்று விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து உள்ளது. களத்தில் கோஹ்லி 59 , ரஹானே 23 ரன்களுடன் உள்ளனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்