இந்தியா, தென்னாபிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இதில் மயங்க அகர்வால் 108 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
களத்தில் கோலி 63 , ரஹானே 18 ரன்கள் உடன் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ரஹானே 59 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலி , ரவீந்திர ஜடேஜா இருவரும் கூட்டணி சேர்ந்தனர்.
ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர்.விராட் கோலி 173 பந்தில் சதம் அடித்தார். பின்னர் 295 பந்தில் இரட்டை சதம் விளாசினார். இரட்டை சதம் அடித்ததன் மூலம் கோலி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சார்பில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 7 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். ஜடேஜா 71 பந்தில் அரைசதம் அடித்தார். இவர்கள் இருவரும் 215 பந்தில் 200 ரன்கள் அடித்தனர்.விராட் கோலி 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஜடேஜா 104 பந்தில் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்கள் எடுத்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…