இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கு பிறகு இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.
எனினும், இதற்கு முன் இந்திய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் எனவும் அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து விராட் கோலி திடீரென மும்பை திரும்பியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை திரும்பிய விராட்:
விராட்கோலி தற்போது பிரிட்டோரியாவில் நடைபெற்று வரும் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கவில்லை எனவும் விராட் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக அவசரமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்துள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் கோலி தென்னாப்பிரிக்கா திரும்புவார் என்றும் அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐயிடம் அனுமதி பெற்று மும்பை சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. கோலி டெஸ்ட் தொடருக்கு திரும்பவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரும் அடியாக அமையும் என கூறப்படுகிறது.
ருதுராஜ் விரலில் காயம்:
இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் டிசம்பர் 19 அன்று போர்ட் எலிசபெத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது காயம் அடைந்த அவர், அதிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை என கூறி 3-வது ஒருநாள் போட்டியில் கூட ருதுராஜ் விளையாடவில்லை, அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ கூறியிருந்தது. இதற்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் முன் ருதுராஜ் குணமடைய வாய்ப்பில்லை எனவும் இதனால் பிசிசிஐயுடன் பேசி அவரை உடனடியாக விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டம்:
பயிற்சி போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…