IND vs SA: அவசரமாக மும்பை திரும்பிய கோலி.. டெஸ்ட் தொடரில் ருதுராஜ் விலகல்..?

Published by
murugan

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கு பிறகு இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

எனினும், இதற்கு முன் இந்திய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.  தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் எனவும் அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து விராட் கோலி திடீரென மும்பை திரும்பியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை திரும்பிய விராட்: 

விராட்கோலி  தற்போது பிரிட்டோரியாவில் நடைபெற்று வரும் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கவில்லை எனவும்  விராட் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக அவசரமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்துள்ளதாக  கூறப்படுகிறது. டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் கோலி தென்னாப்பிரிக்கா   திரும்புவார் என்றும் அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐயிடம் அனுமதி பெற்று மும்பை சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.  கோலி டெஸ்ட் தொடருக்கு திரும்பவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரும் அடியாக அமையும் என கூறப்படுகிறது.

ருதுராஜ் விரலில் காயம்:

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் டிசம்பர் 19 அன்று போர்ட் எலிசபெத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது காயம் அடைந்த அவர், அதிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை என கூறி 3-வது ஒருநாள் போட்டியில் கூட ருதுராஜ் விளையாடவில்லை, அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ கூறியிருந்தது. இதற்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்  முன் ருதுராஜ் குணமடைய வாய்ப்பில்லை எனவும் இதனால் பிசிசிஐயுடன் பேசி அவரை உடனடியாக விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டம்:

பயிற்சி போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

 

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

1 hour ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago