IND vs SA: அவசரமாக மும்பை திரும்பிய கோலி.. டெஸ்ட் தொடரில் ருதுராஜ் விலகல்..?

Published by
murugan

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கு பிறகு இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

எனினும், இதற்கு முன் இந்திய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.  தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் எனவும் அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து விராட் கோலி திடீரென மும்பை திரும்பியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை திரும்பிய விராட்: 

விராட்கோலி  தற்போது பிரிட்டோரியாவில் நடைபெற்று வரும் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கவில்லை எனவும்  விராட் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக அவசரமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்துள்ளதாக  கூறப்படுகிறது. டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் கோலி தென்னாப்பிரிக்கா   திரும்புவார் என்றும் அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐயிடம் அனுமதி பெற்று மும்பை சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.  கோலி டெஸ்ட் தொடருக்கு திரும்பவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரும் அடியாக அமையும் என கூறப்படுகிறது.

ருதுராஜ் விரலில் காயம்:

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் டிசம்பர் 19 அன்று போர்ட் எலிசபெத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது காயம் அடைந்த அவர், அதிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை என கூறி 3-வது ஒருநாள் போட்டியில் கூட ருதுராஜ் விளையாடவில்லை, அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ கூறியிருந்தது. இதற்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்  முன் ருதுராஜ் குணமடைய வாய்ப்பில்லை எனவும் இதனால் பிசிசிஐயுடன் பேசி அவரை உடனடியாக விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டம்:

பயிற்சி போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

 

Recent Posts

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

17 minutes ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

21 minutes ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

48 minutes ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

2 hours ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

3 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

3 hours ago